Type Here to Get Search Results !

வரம்

 புலரும் ஒவ்வொரு நாளும் மலரும் மலருக்கு ஒப்பானது

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும்


கடந்து செல்லும் காற்று அனுபவம்.....

வீசும் மணமே நம் குணம்


கடந்து செல்லும் காற்று கடத்தி மணம் வீசும்

கடந்து செல்லும் வாடை

கிடத்தி  பிணம் ஆக்கும்

இரண்டும் காற்றுதான் எதிர்ப்படும் மனிதர்கள்....


எதுவாகினும் மலர்ந்து கிடக்கும் மலராகவே இருப்போம்.........


இதழ் விரித்து சிரிக்கிறதே இப்படியே இருப்போம்....


இந்த நாள் இனிய நாளாக இறைவனை துதிப்போம்....


இந்த நாள் கிடைத்த வரம்

இதனை கழிப்போம் தரம்

கிடைக்கும் அனுபவம் உரம்...


இவண்

ஆற்காடு க குமரன்

9789814114

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.